கள்ளக்காதல் .. 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
கரூர்:
கள்ளக் காதலைக் கண்டித்த கணவனைக் கண்டித்து இரண்டு குழந்தைகளையும் கொன்றுதாய் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர், பரமத்தியை அடுத்த மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (38). இவருக்குமதி (35) என்ற மனைவியும், தினேஷ் (8), தீபா (16) ஆகிய இரண்டு குழந்தைகளும்இருந்தனர்.
தினேஷ் மற்றும் தீபா ஆகியோர் திராவிட மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.ராமசாமிக்கும், மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மதி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக தெரிய வந்ததையடுத்துஇந்த தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராமசாமி, மனைவி மதிக்கு புன்னசத்திரம் என்றஇடத்தில் மளிகைக் கடை வைத்துக் கொடுத்தார்.
ஆனால் மதி, அருகில் இருந்த கடைக்காரர் ஒருவருடன் மீண்டும் கள்ளத் தொடர்புவைத்துக் கொண்டார். இதை ராமசாமி கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாயத்துக் கூடி, மதியையும் அருகில் இருந்த கடைக்காரரையும்கண்டித்துள்ளது. இதனால் தனது இஷ்டம்போல் வாழ முடியாத மதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
எனவே, அக்.9ம் தேதி மாலை மதி மொபட்டில் பள்ளிக்குச் சென்று தீபாவைஅழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். தினேஷ் சைக்கிளில் பள்ளியிலிருந்துவீட்டிற்குத் திரும்பினான். இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் மதிகிளம்பினார்.
பக்கத்து வீட்டில் தீபாவளிக்குத் துணி எடுப்பதாகக் கூறிச் சென்றார். ஆனால் இரவுஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.பின்னர் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் மறுநாள் அதிகாலையில், சாலிக்குடி அருகே அரசம்பாளையம் என்றஇடத்தில் அம்மையப்பன் தோப்பில் மூன்று பேர் தூக்கில் தொங்குவதாகபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு மதி, தினேஷ் மற்றும் தீபாவைகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.