இலங்கை தேர்தல்: முன்னணியில் சந்திரிகா கட்சி
கொழும்பு:
அதிபர் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி, இலங்கை நாடாளுமன்றத்திற்குநடந்த தேர்தலில் இதுவரை முடிவு தெரிந்த 74 தொகுதிகளில் 52 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
சந்திரிகா கூட்டணிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே 6 சதவீத வாக்கு வித்தியாசம்தான் இருக்கிறது. மக்கள கூட்டணி 47.41 சதவீதவாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 41.47 சதவீத வாக்குகளையும் இதுவரைபெற்றுள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 6.8 சதவீத வாக்குகள்கிடைத்துள்ளன. ஆனால் ஒரு இடத்திலும் அது வெற்றி பெறவில்லை.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் மக்கள் கூட்டணிக்கு 18.7 லட்சம் வாக்குகளும்,ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16.6 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜனதா விமுக்திபெரமுனா கட்சிக்கு 2.5 வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கை தேர்தல் விதிப்படி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில்தான்நாடாளுமன்றத்தில் சீட்டுகள் கிடைக்கும். அதன்படி, மக்கள் கூட்டணிக்கு 52இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 17 இடங்களும் தமிழர் கட்சிகளான தமிழர்ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழ விடுதலைக் கழகம் கட்சிகளுக்கு தலா 2இடங்களும், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன.
கம்பஹா, மாத்தரா, கலுத்தரா, கல்லே, அம்பாரை மாவட்டங்களில் மக்கள்கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கபொலனருவா, அனுராதபுரா ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தலைநகர் கொழும்பில், ஐக்கிய தேசியக் கட்சி 20 இடங்களில் முன்னணியில் உள்ளது.வட யாழ்ப்பாணத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முன்னணியில் உள்ளது.
ஊரடங்கு விலக்கப்பட்டது:
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதிலும் அமல் செய்யப்பட்டஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
தேர்தல் வன்முறையையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது கண்டி மற்றும்சில பகுதிகளில் நடந்த தேர்தல் வன்முறை மற்றும் முறைகேடு காரணமாக வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்தவுடன்இங்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications