திருவண்ணாமலையில் டிச. 9-ல் கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதிதுவங்குகிறது.
சிவபெருமானின் சிறப்பான கோவில்கள் அவர் குடிகொண்டிருக்கும் பஞ்சபூதங்கள்கோவில்களாகும். அதில் நெருப்புக்கான கோவில் திருவண்ணாமலை. இங்குசிவபெருமான் அருணாசலேஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆண்டு தோறும் நடக்கும் கார்த்திகை தீப விழா மிகச் சிறப்பாககொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா நவம்பர் மாதம் 30-ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் விழா நிகழ்ச்சி நிரல் விவரம்:
30.11.2000 : காலை 7.30 மணிக்கு கொடியேற்றம்.
01.12.2000: இந்திர விமானத்தில் ஸ்வாமி ஊர்வலம்
05.12.2000: ரத உற்சவம்.
06.12.2000: தேரோட்டம்.
09.12.2000: மாலை 4 மணிக்கு பரண தீபம். மாலை 6 மணிக்கு மகா தீபம்ஏற்றப்படும்.
இத்ைை தொடர்ந்து மூ ன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். சென்ற ஆண்டுகார்த்திகை தீப திருவிழாவிற்கு 9 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டுதிருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து இலாகா அதிகாரிகள் கூட்டம் கலெக்டர்அலுவலகத்தில் நடைபெற்றது.