கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர்
தேனீ:
சமுதாய அக்கறையோடு தான் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்ககை எடுக்காததால்வருத்தமடைந்த வாலிபர் தேனி கலெக்டர் அலுவலககத்தில் விஷம் குடித்துமயக்கடைந்தார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்யைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் என்பவர்.இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது ஊரில்நிலவிவரும் அவலங்களை நீக்க நடவடிக்கை எடுக்கம்படி மாவட்ட கலெக்டருக்குபலமுறை மனு கொடுதிதருந்தார்.
ஆனால் அவர் கொடுத்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும எடுக்கப்படாததால்அவர் மனமுடைந்தார். வியாழக்கிழமையன்று விஷம் குடித்துவிட்டு கலெக்டர்அலுவலகம் வந்து, நான் கொடுத்த மனுக்கள் மீது எந்த நடவடித்கையுமஎடுக்கப்படவில்லை. என் சாவுக்கு பிறகாவது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறிமயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.