பீகாரில் 11 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சில குற்றவாளிள் சரமாரியாக சுட்டதில் 11 பேர்உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மாநிலடி.ஜி.பி. ஜேக்கப் கூறுகையில், இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கைமேலும் உயரலாம் என்று நினைக்கிறோம்.
கொல்லப்பட்ட அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டுபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இந்த படுகொலைச் சம்பவம்நடந்தது என்றார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ், அரசு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.சம்பவம் நடந்த பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications