அரசு பஸ் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவது போதாது என்றுகோரி தமிழகம் முழுவதிலும் எட்டு தொழிலாளர் சங்கம் சார்பில் சனிக்கிழமைவேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.
இருப்பினும் வேலைநிறுத்தம் சட்டவிரோதம். தமிழகத்தில் சனிக்கிழமையன்றுவழக்கம்போல் ஓடும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்முடிகூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்திருப்பதாவது:
சில சங்கங்கள அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது.அதனால் போக்குவரத்து பாதிக்கப்படாது. அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு போனஸ்கிடையாது என்றாலும், கடந்த ஆண்டு முத்ல அனைவருக்கும் 20 சதவீதம் போனஸ்வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆட்சியில் அதிக சம்பளம் பெற்றவர்களுக்கு கருணைத்தொகை மட்டுமேவழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பையடுத்து மாநிலம் முழுவதும்மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications