பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் அராபத், பாரக்
வாஷிங்டன்:
இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான சண்டைஓய்ந்துள்ள நிலையில், பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேல் பிரதமர்எஹுத் பாரக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த இரண்டு வார காலமாக பாலஸ்தீனர்களுக்கும் இஸரேலிய ராணுவவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தலைவரும், இஸ்ரேலிய பிரதமரும் திங்கள் கிழமையன்று எகிப்தில் உள்ள ஷராம் இல்ஷேக் என்ற இடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அராபத், பாரக்கை தவிர எகிப்து மன்னர் ஹோஸ்னி முபாரக், ஜோர்டான் மன்னர்அப்துல்லாவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கோஃபிஅன்னானுக்கும், அராபத்துக்கும இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகுமுடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் பில் கிளின்டணும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்றுதெரிகிறது. அமெரிக்காவில் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த சமயத்தில்கிளின்டன் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது ஜனநாயக கட்சி வேட்பாளர்அல் கோரேயின வெற்றி வாயப்பைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதால், கிளின்டண்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.