இந்திய மேப்பில் நேபாளத்தை இணைப்பதா? ஆர்.எஸ்.எஸ்சுக்கு கண்டனம்
காத்மாண்டு:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்ட இந்திய மேப்பில், நேபாளத்தை இணைத்துஇருப்பதற்கு நேபாள எதிர்க்கட்சியான நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கியமார்க்சிஸ்ட் லெனினிஸ்ய் (யுஎம்எல்) கண்டித்துள்ளது.
75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்டும்வகையில், விவேக் என்ற மராத்திய வாரப்பத்திரிக்கை அம்ரித்பாத் என்றதுண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டது. அதில் கிரேட்டர் இந்தியா என்ற வரைபடமும்பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அந்த வரைபடத்தில் நேபாள நாடும் இந்தியாவின் ஒரு பகுதியாக்பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதற்குத்தான் நேபாள எதிர்க்கட்சி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
யு.எம்.எல். செய்தித் தொடர்பாளர் பிரதிப் நேபால் ஒரு அறிக்கையில்கூறியிருப்பதாவது, இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாவுடன் தொடர்புகொண்டுள்ள ஒரு அமைப்பு நேபாளத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகதெரிவித்திருப்பதன் மூலம், நேபாளத்தின் இறையான்மையையும், சீரியதன்மையையும் பாதித்திருக்கிறது என கூறியுள்ளார்.
நேபாளத்திலுள்ள இந்து பரிஷத், நேபாள் இந்து சங்காதன், பஷுபதி சிக்சியா பிரச்சார்சமிதி மற்றும் சேவாதம் ஆகிய அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆதரிக்கும்அமைப்புகள் ஆகும். இவற்றிற்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இது குறித்துத் தெரிவிக்கையில்,இந்தப் பிரச்சினை அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் இது குறித்து கருத்துதெரிவிக்க முடியாது என கூறினர்.
நோபாள வெளியுறவுத்துறை அமைசச்ர் கூறுகையில், நேபாள அரசு இது குறித்த தனதுகருத்தை ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கும் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.