ஸ்ரீமாவோ இறுதிச் சடங்கு: கொழும்பு சென்றார் கிருஷ்ண காந்த்
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டினம்:
இலங்கை முன்னாள் பிரதமர் மறைந்த சிரிமாவோ பண்டாரநாயகாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ண காந்த்,கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் கடந்த 10-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்களித்துவிட்டுகாரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிரிமாவோ பண்டரநாயகா திடீர் மாரடைப்பால்மரணமடைந்தார்.
கொழும்பில் உள்ள வீட்டில் மக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் சிரிமாவோபண்டாரநாயகாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை இறுதிச் சடங்குநடைபெறுகிறது.
இந்த இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள குடியரசுத் துணைத்தலைவர் கிருஷ்ண காந்த் சனிக்கிழமை காலை கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.இந்திய விமானப்படையில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை சென்ற அவருடன்உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications