"பா.ஜ.க. சிறுபான்மை விரோத கட்சி அல்ல
சேலம்:
பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல எனசேலத்தில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி மண்டல மாநாட்டில்கட்சித் தலைவர் கிருபாநிதி கூறினார்.
சேலம்தில் அம்மாபேட்டையில் நடந்த பாரதிய ஜனதாக்கட்சியின் மண்டல மாநாட்டில் தமிழ்நாடு பாரதிய ஜனதாக்கட்சியின் தலைவர் கிருபாநதி பேசியதாவது:
சர்வதேச அளவில் இந்தியாவை வலிமை மிக்க பாரதமாக பிரதமர்வாஜ்பாய் உயர்த்திக் காட்டியுள்ளார். இந்தப் புகழ் இந்தியக்கிராமங்களில் கூட பிரகாசிக்கிறது.
அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெறவேண்டுமானால், கிராமங்கள் தோறும் பாரதிய ஜனதாக் கட்சிக்குஓட்டளிக்க தாமரைச் சின்னத்தை மக்களிடையே பிரபலமடையச்செய்ய வேண்டும்.
வாஜ்பாய்க்கு ஏற்பட்டுள்ள நற்பெயரை ஓட்டுக்களாக மாற்றதொண்டர்கள் பாடுபட வேண்டும்.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களிடையேபா.ஜ., கொள்கைகளைப் பரப்ப வேண்டும். இவர்களிடையேபா.ஜ.க. பற்றி நிலவும் தவறான கொள்கையை துடைத்தெறியவேண்டும்.
பாரதிய ஜனதா, எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானகட்சி அல்ல என்பதை அனைத்துப் பிரிவினருக்கும் தெரிவிக்கவேண்டும்.
இக் கட்சியில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடின்றி அனைவரும்செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications