2.25 கோடி மோசடி .. 81 வயது தொழிலதிபர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் 2.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 81 வயதுதொழிலதிபரைப் போலீசார் கைது செய்தனர். பங்குதாரர்களானமகன், மருமகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுண்டக்காபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர்ரங்கசாமி (81). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவைஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கம்ப்ளக்சில் நிதி நறுவனம்ஒன்றைத் தொடங்கினார்.

இந்த நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவந்தார். 1998ம் ஆண்டு இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படத்தொடங்கியது. அப்போது நிறுவனத்தில் டெபாசிட் செய்தஅனைவரும் இந்த நிறுவனத்திற்கு படையெடுக்கத் தொடங்கினர்.ஆனால் பணம் கிடைக்கவில்லை.

பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தைத் திருப்பித் தர காலஅவகாசம் கேட்டார். கால அவகாசத்திற்குப் பிறகும் அவரால்பணத்தை திருப்பித்தரவில்லை. இதையடுத்து, கோவைபொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம்டெபாசிட் செய்தவர்கள் புகார் செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தமோசடி தொடர்பாக ரங்கசாமியைக் கைது செய்தனர். மேலும்,நிதி நறுவனத்தின் பங்குதாரர்களான இவரது மகன் நாகநாதன்மற்றும் மருமகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+