டெல்லி விரைந்தார் தமிழக உள்துறை செயலாளர்
சென்னை:
தமிழக உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர்ஆகியோர் சனிக்கிழமை அவசரமாக டெல்லி சென்றனர்,
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில்,தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை கூற அவர்கள் டெல்லி சென்றிருப்பதாககூறப்படுகிறதது.
வீரப்பன்பிடியில் உள்ள நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க தமிழக சிறையில் உள்ள தடாகைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.தடா கைதிகளை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
வீரப்பனை சந்திக்க ஐந்தாவது முறையாக அரசுதூதர் கோபால் சென்றுள்ளார். இந்தமுறை அவருடன் நெடுமாறன், சுகுமாறன், கல்யாணி ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வனத்துறைச் செயலாளர் சாந்தாஷீலா நாயர், கூடுதல் டி.ஜி.பி.அலெக்சாண்டர் ஆகியோர் சனிக்கிழமையன்று அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளதுமுக்கியமாக கருதப்படுகிறது.
ராஜ்குமாரை மீட்க தமிழக அரசு இதுவரை எடுத்த முடிவுகள் குறித்து தமிழக அரசுசார்பாக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களிடம் விளக்க அவர்கள்டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுதிறது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications