For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமாருடன் வருகிறேன் - நெடுமாறன் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகிறேன்என்று வீரப்பனிடம் தூதராகச் சென்ற தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்கேசட் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக சன் டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, காட்டிலிருந்து வெளியே வரும் ராஜ்குமாரை அழைத்து வர தலமலையில்ஒரு ஆம்புலன்ஸ் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்தெரிவித்தன.

ராஜ்குமாரை தலமலைப் பகுதிக்குக் கொண்டு வந்து அங்குதான் வீரப்பன்விடுவிப்பான் என்று கருதப்படுவதால் அங்கு ஆம்புலன்ஸ் தயாராகவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீரப்பனிடமிருந்து விடுவிக்கப்படும் ராஜ்குமார், தலமலையில் உள்ள விருந்தினர்மாளிகையில் தங்கவைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு சென்னைக்கு அழைத்துச்செல்லப்படுவார் என்று கருதப்படுகிறது.

அதே நேரத்தில் தலமலை காட்டுப்பகுதியிலிருந்து நேரடியாக ராஜ்குமாரைச்சென்னைக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு ஹெலிகாப்டரும் தயாராக வைக்கும்படிகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்பட 4 பேர்சில நாட்களுக்கு முன் காட்டுக்குள் சென்று சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்கவீரப்பன் ஒப்புக் கொண்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள்விடுவிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை காட்டியிலிருந்து செய்தி அனுப்பிய பழ.நெடுமாறன், இரவுக்குள் நல்ல தகவலைத் தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X