ராஜ்குமார் நாளை விடுதலை?
பெங்களூர்:
வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமார், திங்கள்கிழமை மாலைவிடுவிக்கப்படலாம் என்று அரசுத் தூதராக காட்டுக்குச் சென்றுள்ள நக்கீரன் கோபால்தெரிவித்துள்ளதாக நக்கீரன் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது வீரப்பனுக்கும், அரசுத் தூதர்களாக சென்றிருக்கும் கோபால், நெடுமாறன்குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தைநெருங்கியிருப்பதாகவும், இதுவரை நடந்த பேச்சு திருப்திகரமாக இருப்பதாகவும் கோபால்தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தடா கைதிகளை விடுவிப்பதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் முயற்சி எடுக்கும் என்றவாதத்தை வீரப்பன் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்கு நெடுமாறன் உறுதிஅளித்துள்ளதாகவும் கோபால் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவடைந்தால், திங்கள்கிழமை மாலை ராஜ்குமார்விடுவிக்கப்படுவார் என்று நக்கீரன் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ராஜ்குமார் விடுதலை ஆனால், முதலில் தலைமலை காட்டுப் பகுதியில் உள்ள கோவில்ஒன்றுக்கு முதலில் அழைத்துச் செல்லப்படுவார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கூட்டிச்செல்லப்படுவார். அங்கு சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கவைக்கப்படுகிறார். மறுநாள் காலையில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ராஜ்குமார்ஒப்படைக்கப்படுவார். கருணாநிதி, பின்னர் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம்,ராஜ்குமாரை ஒப்படைப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications