காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 5 பாக். தீவிரவாதிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில்5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்ஈடுபட்டிருந்தனர். யூரி பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்திக்கொண்டிருந்த அவர்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் இறந்தார். இதையடுத்து தீவிரவாதிகள்மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர்இறந்தனர். விசாரணையில் 5 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள்என்று தெரியவந்தது.
தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் ஏராளமான வீடுகள்சேதமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications