சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி
Subscribe to Oneindia Tamil
பதனம்திட்டா:
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமைகுருக்கள்) வி.பி. சாம்பு வாத்யார் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
54 வயதான இவர் அடுத்த ஓராண்டுக்கு அப் பதவியில் இருப்பார். கே. பரமேஸ்வரன்நம்பூதிரி (52), மல்லிகாபுரம் தேவி கோயில் மேல்சாந்தியாக (தலைமை குருக்கள்)நியமிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் இத் தேர்வுகள் நடத்தப்பட்டன.தலைமை குருக்கள் தேர்வில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வி.ஜி.கே.மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது வைக்கத்தில் உள்ள உதயனபுரம் தேவி கோயிலில் தலைமை குருக்களாகப்பணியாற்றி வருகிறார் வி.பி. சாம்பு வாத்யார் நம்பூதிரி. இவர் ஏற்கெனவேபையனூரில் உள்ள நீலக்கரா பகதவதி கோயில் மேல்சாந்தியாகப் பணியாற்றியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications