தூதுக் குழுவினருக்கு ராஜ்குமார் மனைவி நன்றி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ள புதிய தூதுக் குழுவினருக்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா நன்றிதெரிவித்துக் கொண்டுள்ளார்.
பழ. நெடுமாறன் குடும்பத்தினரை திங்கள்கிழமை இரவு பர்வதம்மா தொலைபேசியில்தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்புவெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நக்கீரன் கோபாலைத் தொடர்ந்து என் கணவர் ராஜ்குமாரை மீட்க ராஜ்குமார் முயற்சிமேற்கொண்டுள்ளார். அவர் நிச்சயம் என் கணவரை மீட்டு வருவார் என்றுநம்புகிறேன்.
எனினும், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து எனக்குக்கவலையாக உள்ளது. அந்த நிலையில், அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்குநானும் எனது குடும்பத்தினர் மட்டுமல்ல கன்னட மக்கள் அனைவரும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
நெடுமாறனுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்ற தூதுக்குழுவினருக்கும்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பர்வதம்மா கூறினார்.
மேலும், ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரும் நன்றி கூறியதாக மக்கள் உரிமைக்கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications