For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தியப் பிரதேசத்தில் பெரும் நில நடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜபல்பூர்:

மத்தியப் பிரசேத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால்,உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரிவில்லை.

ரிக்டர் அளவுகோளில் 5.2 அளவுக்கு இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. பரேலா-குமாரியா பகுதியில் நிலநடுக்கம்மையம் கொண்டிருந்தது.

சுமார் 10 நொடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தில் வீடுகள் அதிர்ந்தன. கட்டில்களில் படுத்திருந்தவர்கள் உருண்டு கீழேவிழுந்தனர். பீதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பெரிய நில நடுக்கத்தின் முன் சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

பொருட்சேதத்தின் அளவு குறித்து இதுவரை ஏதும் தகவல் இல்லை.

1997ம் ஆண்டு மே 22ம் தேதி ஜபல்பூரில் மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பெரும்அளவிலான கட்டடங்கள் சேதமடைந்தன. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்த கோசோம் காட் என்றகிராமமே நிலத்தில் புதைந்துபோனது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X