சபரிமலை சீசன்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
திருவனந்தபுரம்:
சபரிமலை சீசனை ஒட்டி சென்னை-திருவனந்தபுரம் இடையே தினந்தோறும் சிறப்பு ரயிலை இயக்கதென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும் எனமத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ஓ. ராஜகோபால் கூறினார்.
இது தவிர கோட்டயம்-பெங்களூர் இடையே ஒருநாள் விட்டு ஒரு நாள் சிறப்பு இயக்குவது குறித்தும்பரிசீலித்து வருகிறோம். இது கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்குஉதவும்.
சபரி ரயில்வே திட்டம் குறித்த சர்வே பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலகோடி மதிப்பிலானஇந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மத்திய அரசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட ரயில்வே அடிப்படைக் கட்டமைப்புக் கழகம்அமைக்க கேரள அரசு மறுத்துவிட்டது. இது அந்த மாநில கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியத்தைத் தான்காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications