படித்த பள்ளிக்கு அப்துல் கலாம் ரூ. 25,000 நன்கொடை
ராமநாதபுரம்:
சிறுவயதில் தான் படித்த பள்ளிக்கு இந்திய ஏவுகணைத் திட்டங்களின் தந்தைஎனப்படும் விஞ்ஞானி 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக நிறுவன தலைவருமான ஆர்.எம். வீரப்பன்தலைமையில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சமீபத்தில் சென்னையில் நடத்தியவிழாவில முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்றார்.
அப்போது அந்தவிழாவில் கலந்து கொண்ட ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமுக்குஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் ராமனுஜம் விருதும், 25 ஆயிரம் ரூபாய்ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
அந்த பணத்தை தான் சிறுவயதில் கல்வி கற்ற ராமேஸ்வரம் பஞ்சாயத்து யூனியன்எண்-1 ஆரம்பப் பள்ளி வளர்ச்சிக்கு வழங்க வேண்டுமென அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஆழ்வார்கள் ஆய்வுமன்ற செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, 25 ஆயிரம்ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட்டை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் பெயருக்குஅனுப்புமாறு முன்னாள் அமைச்சர் டி.ராமசாமிக்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.
ராமநாதபுரத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி சையத் அலி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் டி. ராமச்சந்திரன் 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)ஹெரினா வில்ஸ் ராணியிடம் வழங்கினார்.
நிதியுதவி செய்த அப்துல் கலாமுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டுதெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.












Click it and Unblock the Notifications