மதுரையில் வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
வழக்கறிஞர்களைத் தாக்கிய லாட்டரி டிக்கெட் ஏஜென்ட் உள்பட 13பேரைக் கைது செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில்வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த இரண்டுவழக்கறிஞர்கள் தங்களுக்கு விழுந்த லாட்டரி பரிசுப் பணத்தைவாங்க லாட்டரி ஏஜென்ட் கே.ஏ.எஸ்.ராமதாஸ் கடைக்குச் சென்றனர்.
அங்கு அவர்களை ராமதாஸும், அவரது உதவியாளர்களும் சேர்ந்துதாக்கியதாகவும், கடையில் அடைத்து வைத்ததாகவும் தெரிகிறது.தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று இரண்டுவழக்கறிஞர்களையும் மீட்டனர்.
இதுகுறித்து மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமிகூறுகையில், இரண்டு வழக்கறிஞர்களுக்கும் லாட்டரியில் ரூ. 6000பரிசு விழுந்தது. அதை வாங்கச் சென்றபோது, ரூ. 900த்திற்கு லாட்டரிடிக்கெட் வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் முழுப்பணமும் வேண்டும் என்று இரு வழக்கறிஞர்களும்வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட தகராறில்,வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தையடுத்து பல வழக்குகளின்விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications