எய்ட்ஸ் நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவ பரிசோதனையில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதுதெரியவந்ததால் மனம் உடைந்த ஒருவர் மருத்துவமனையின் 2-வதுமாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் தெருவில் வசித்தவர் சசீதரன் (34).சொந்த ஊர் கேரளா. இங்குள்ள டீக்கடையில் வேலை பார்த்தார்.
பால்வினை நோய் தாக்கிய நிலையில் இவரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர்.
பால்வினை சிகிச்சை பிரிவு வார்டில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தபரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயம் தெரிந்ததும் சசீதரன் ரொம்பவும் உடைந்து போனார்.இனிமேல் எப்படி வாழ்வது என்ற பயத்தில் மனமுடைந்தார்.
மருத்துவமனை 2-வது மாடியில் தங்கியிருந்த அவர் அங்கிருந்து கீழேகுதித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications