விமானப்படை ஹெலிகாப்டர் மலையில் மோதியதில் ஒருவர் பலி
குவஹாத்தி:
அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தில் விமானப்படைஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், ஒருவர் இறந்தார்.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். வழக்கம் போல பயிற்சிக்காக அந்தஹெலிகாப்டர் சென்றபோது விபத்து ஏற்பட்டது. மேல் சியாங் மாவட்டத்தின் மேலேபறந்து கொண்டிருந்தபோது ஹன்சார் என்ற கிராமத்திற்கு அருகே மலை மீது மோதிகீழே விழுந்து நொறுங்கியது.
கடந்த 72 மணி நேரங்களில் வட கிழக்கு மாநிலங்களில் நடந்த இரண்டாவது விமானவிபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாமில் இரண்டு மிக் விமானங்கள்நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒரு பயிற்சி விமானி திங்கள்கிழமை இறந்தார்என்பது நினைவிருக்கலாம்.
தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ரஷியத் தயாரிப்பாகும். கிழக்குஅஸ்ஸாமின் ஜோர்ஹட் மாவட்டத்திலுள்ள ரொவ்ரியா விமான தளத்திலிருந்து இதுபுறப்பட்டுச் சென்றது.
காயமடைந்த நான்கு பேரும் இன்னொரு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குறைந்தது 100 கிராமங்கள் வரை போக்குவரத்துவசதியில்லாத கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலை வாழ் மக்களுக்குஹெலிகாப்டர் மூலம் மட்டுமே உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications