வெடிகுண்டு வைத்திருந்தவர்களுக்கு 4 ஆண்டு சிறை
கோவை:
வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த வழக்கில், இரண்டு பேருக்கு நான்கு ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர்மாதம் 6- ம் தேதி கோவையில் கலவரம் ஏற்படுத்த ஒரு கும்பல் திட்டமிட்டது.இதற்காக வெடிகுண்டுகள் தயார் செய்யப்படுவதாக உளவுப் பிரிவு போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் பல இடங்களில் கடும் சோதனை மேற்கொண்டனர்.அப்போது டிசம்பர் 1-ம் தேதி வெடிகுண்டுகள் தயார் செய்யத் தேவையானமருந்துகள், மற்றும் ஜெலட்டின் குச்சிகள், சல்பர் உட்பட பெட்ரோல் வெடிகுண்டுகளைஉருவாக்கத் தேவைப்படும் பொருட்களைப் போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து 14 பேரைக் கைது செய்தனர். இந்தவழக்கு கோவை முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 14பேரில் கோவை குனியத்தூரைச் சேர்ந்த நாகூர் மீரான், சுண்டக்காத்தூரைச் சேர்ந்தஅப்துல் ரஹ்மான் ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இருவருக்கும் தலாநான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பொன்னுச்சாமிதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications