திருச்சியில் போட்டியிட மாட்டேன் .. ஜனா.கிருஷ்ணமூர்த்தி
புதுடெல்லி:
திருச்சிஎம்.பி. தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாரதீயஜனதாக் கட்சி துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மந்திரிரங்கராஜன் குமாரமங்கலம் காலமானதால் அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்ததொகுதியிலிருந்து ஜனா.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நான் திருச்சி எம்.பி. தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன ஜனா.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், திருச்சி எம்.பி. தொகுதியில்போட்டியிடபாரதீய ஜனதாவில் தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுடன் திருச்சி எம்.பி .தேர்தலும் நடைபெறும்.தேசியகூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், திராவிட முன்னேற்றகழகமும் தங்களிடம் நிலவும் பிரச்னையை வெளியில் சொல்லாமல் அகில இந்தியஅமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவித்த கருத்து பற்றி கூட்டணி கட்சிகூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பிரதமர் நலமுடன் இருக்கிறார். எனவே அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கேஇடமில்லை. பாண்டிச்சேரியில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்நடக்கவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேரதல் நடத்தப்படவேண்டும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications