வீரப்பனைப் பிடிக்கத் தயார் .. கூறுகிறார் தேவாரம்
டெல்லி:
பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை ஏற்றுவீரப்பனைப் பிடிக்க தயாராக இருப்பதாக முன்னாள் அதிரடிப்படைத் தலைவர்வால்டர் தேவாரம் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக சிறையில் உள்ள தடா கைதிகளைவிடுவிக்க கர்நாடக அரசு முடிவு செய்ததை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்ட்டஅதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாதத்திற்கு இடையே முன்னாள்அதிரடிப்படைத் தலைவர் தேவாரம் எழுத்து மூலம் கொடுத்த வாக்குமூலத்தை அப்துல்கரீமின் வக்கீல் வதேரா தாக்கல் செய்தார்.
தேவாரம் அளித்த வாக்குமூலத்தில், வீரப்பனைப் பிடிக்க கடந்த காலத்தில் தமிழக -கர்நாடக அதிரடிப்படையினர் கூட்டு முயற்சியில் ஈடுபட்ட போது, வீரப்பனின் பலம்150-லிருந்து 5- ஆக குறைக்கப்பட்டது.
நான் இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட, அதிரடிப்படைக்குதலைமை தாங்கி வீரப்பனைப் பிடிக்க தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications