ராஜ்குமாரை மீட்க காடு செல்லத் தயார் ..இளங்கோவன்
சென்னை:
ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் செல்லத் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன் கிழமை அவர் அளித்த பரபரப்பான பேட்டி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க நெடுமாறனை அரசு தூதராக அனுப்பியது தவறுஎன்றபோதிலும், ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நல்ல எண்ணம் காரணமாக அமைதியாகஇருந்தேன்.
இந்த பிரச்னை தொடர்பாக சர்வ கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்றுநாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதைஆதரித்துள்ளது.
கர்நாடக அரசு இதுவரை மூன்று முறை சர்வ கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. ராஜ்குமார்மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. எனவேமுதல்வர் கருணாநிதி தயக்கமின்றி நல்ல காரியம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.
வீரப்பனை சந்திக்க சர்வக் கட்சிக் குழு ஒன்றை காட்டிற்குள் அனுப்ப வேண்டும். இந்தகுழுவில் காங்கிரஸ் சார்பில் நான் செல்லத் தயாராக இருக்கிறேன்.
டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன்.டான்சி தீர்ப்புக்கு பிறகு உள்ள நிலைமை குறித்தும் விவாதித்தேன். மூன்றாவது அணியோசனை பற்றியும் அவரிடம் விளக்கினேன்.
எனினும் அ.தி.மு.க.வுடன் தற்போது உள்ள கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.கூட்டணி தொடருமா என்பதை சோனியா முடிவு செய்வார்.
கடந்த ஒரு மாதமாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் குழம்பிய நிலையில் உள்ளார். அவர்தெளிவான முடிவை சொன்னால் அதுபற்றி எங்கள் கருத்தை கூற முடியும். அ.தி.மு.க.அணிக்கு பா.ம.க. வருவது பற்றி அவரது பேச்சில் தெளிவு இல்லை..
மதுரையில் அடுத்த மாதம் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சோனியாபேசுகிறார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications