காஷ்மீர் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானையும் சேர்க்கக் கோரிக்கை
பெங்களூர்:
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையில்பாகிஸ்தானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தஇரண்டு பேர் கூறியுள்ளனர்.
காஷ்மீர் மானிட்டர் பத்திரிகை ஆசிரியர் ஜாபர் மெஹ்ராஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.என்.கெளகர் ஆகியோர் பெங்களூர்வந்திருந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசுகையில்,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அமைதி நிலவ வேண்டும். அங்கு முடங்கிப்போயிருக்கும் ஜனநாயகத்தை மீண்டும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தீவிரவாதிகள் அனைவரும் அமர்ந்து இந்தப்பிரச்சினை தொடர்பாக மனம் விட்டுப் பேச வேண்டும். நீண்ட காலமாக இருந்து வரும்காஷ்மீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
துப்பாக்கி சத்தம் ஓய்ந்து, தீவிரவாதம் ஒழிவதையே ஜம்மு காஷ்மீர் மக்கள்விரும்புகிறார்கள்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானைச் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications