ராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி
கொழும்பு:
வட இலங்கையில் வவுனியா-மன்னார் சாலையில் ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.இதில் குறைந்தபட்சம் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
வீரர்கள் திருப்பித் தாக்கியதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,பெரெயன்குளம் சந்திப்பில் உள்ள ராணுவ முகாமின் மீது புதன்கிழமை காலை 6.30 மணிக்கு புலிகள் தாக்குதல்தொடுத்தனர்.
தாக்குதல் நடந்தபோது 5 ராணுவ வீரர்கள் மட்டுமே முகாமில் இருந்தனர். முகாமைச் சேர்ந்த பல வீரர்கள் ரோந்துப் பணிக்குவெளியே சென்றுவிட்டனர். தாக்குதலில் முகாமின் தகவல்-தொடர்பு பாதிக்கப்பட்டுவிட்டதால், எத்தனை பேர் இறந்தனர்என்பது சரியாகத் தெரியவில்லை.
புலிகள் தாக்கியவுடன் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி திருப்பித் தாக்கினார். இதில் ஒரு புலி கொல்லப்பட்டார். மற்றபுலிகள் தப்பிவிட்டனர். சம்பவ இடத்திலிருந்து புலிகள் விட்டுச் சென்ற வீடியோ காமிா பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
புலிகளின் தாக்குதலில் இந்த முகாமின் தகவல்-தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு கூறியது.இது புலிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் என ராணுவம் தெரிவித்தது.
நாடாளுமனறம் கூடுகிறது:
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமனறம் புதன்கிழமை முதல்முதலாக கூட உள்ள நிலையில்புலிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொழும்பில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த முகாமுக்கு பிற படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications