காஞ்சிபுரத்தில் லூம் வோர்ல்டு
கோவை:
காஞ்சிபுரத்தில் 2.5 கோடி ரூபாய் செலவில் "லூம் வேர்ல்டு என்ற பட்டுச்சேலைக்கான ஷோ ரூம் திறக்கப்படும் என தமிழக கைத்தறித் துறை அமைச்சர்பெரியசாமி தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனியில் லூம் வேர்ல்டு ஷோ ரூம் செயல்பட்டுவருகிறது. இங்கு சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளைபொதுமக்களுக்கு அரசு சார்பில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கேபெரியசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் அமைக்கப்பட்டுள்ள லூம் வேர்ல்ட் காட்சி கடைகளைப்போன்றே பட்டுச் சேலைகளுக்கு என காஞ்சிபுரத்தில் லூம்வேர்ல்டுதுவங்கப்படுகிறது.
இந்த லூம் வேர்ல்ட் ரூ.2.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.இங்கு 200 கார்கள் வரை நிறுத்த இடம் உண்டு. காஞ்சிபுரத்திற்கு வரும்பயணிகள் ஒரிஜினல் பட்டுச் சேலைகளைத் தேடி அலைய வேண்டியஅவசியம் இனி இருக்காது.
இந்த லூம் வேர்ல்டைத் தவிர விரைவில், திருச்சி, மதுரை, நெல்லை ஆகியஇடங்களிலும் இத்தகைய ஷோரூம்கள் அமைக்கப்படும்.
கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் கோவையில் தான் அதிகம் உள்ளது.தமிழகத்தில் உள்ள 143 கூட்டுறவு சங்கங்களில் 36 சங்கங்கள் கோவையில்உள்ளது.
தற்போது அரசு கைத்தறி ரகங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதன்மூலம் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. ஒவ்வொரு நெசவாளர்களும்குறைந்த பட்சம் மாதம் 5000 ரூபாய் ஊதியம் பெருமளவிற்கு இந்த ஏற்றுமதிஉதவும். இதன் மூலம் இவர்களது வாழ்க்கைத் தரம் உயரும் என்றார்.