தீபாவளி "ஸ்பெஷல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை:
தீபாவளி விற்பனைக்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தகள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த எண்ணூ
இதையடுத்து போலீஸ் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீஸ்படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுக்குப்பம், மாதா கோயில் தெருவில் உ.ள்ள வீட்டை போலீசார்முற்றுகையிட்டனர். உள்ளே ஒரு சாராயத் தொழிற்சாலையே இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கள்ளச் சாராயம் தயாரிப்பு, மறுபக்கத்தில் அதைபாக்கெட்டுகளில் அடைப்பு என்று படுஜோராக வேலை நடந்து கொண்டிருந்து.
அதே வீட்டில் இன்னொரு அறையில் சாராய பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாகஅடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 10 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி நாளில் அதிக அளவில் கள்ளச் சாராயம் விற்பனையாகும் என்பதால்அதற்காக இப்போதே ஆயிரக்கணக்கில் பாக்கெட்டுகள் தயார் செய்து ஸ்டாக்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தேசம்மாள் (60), தேவா (31), முனிரத்தினம், முனியம்மாள், பாபு,வேலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.