பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்க 100 படைகள்
சென்னை:
தீபாவளி ஸ்பெஷலாக பஸ்களில் பிக்பாக்கெட் பேர்வழிகளைபிடிப்பதற்கென சென்னை நகர போலீசில் 100 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
துணை கமிஷனர் சிவானாண்டி தலைமையில் அண்ணாநகர் பகுதியில்புதனன்று இப்படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 10பிக்பாக்கெட் திருடர்கள் பிடிபட்டனர்.
தீபாவளி நேரம் இது என்பதால் பஸ்களில் பிக்பாக்கெட் திருடர்கள்நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர்காளிமுத்துவுக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகர பஸ்களில்சோதனையிடுவதற்கெனவே 100 தனிப்படைகளை அவர்அமைத்துள்ளார்.
அப்படையினர் காலை 8 மணி தல் இரவு 10 மணி வரையில் மப்டியில்பஸ்களில் திடீர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாகஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் அதிகம் உள்ள பஜார்களுக்கு செல்லும்வழித்தடங்களில் இந்த சோதனையில் அதிகமாக அவர்களஈடுபட்டுள்ளனர்.
புதன் கிழமை நடத்திய சோதனையில் மட்டும் 10 பிக்பாக்கெட் திருடர்கள்டிபட்டனர். இந்த சோதனை தீபாவளி முடியும் வரை தொடரும் என்றுபோலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications