For Quick Alerts
For Daily Alerts
Just In
3-வது அணியில் பா.ம.க. இணையாது .. ராமதாஸ்
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஏற்படும் மூன்றாவது அணியில் பாட்டாளி மக்கள் கட்சிஇருக்காது. இரண்டாவது பெரும் கட்சியே எங்கள் கட்சி தான் எனநிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ்கூறியதாவது:
தமிழகத்தில் இரண்டாவது பெரும் கட்சியாகப் பாட்டாளி மக்கள்கட்சி உருவெடுத்துள்ளது. எனவே, மூன்றாவது அணியில் எங்கள்கட்சி இடம் பெறும் என்பது தவறானது.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ்,ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது.தற்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத்துடிக்கிறது.
தமிழகத்தில் த.மா.கா வே இல்லை. காமராஜர் ஆட்சிவேண்டுமானால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டுகாங்கிரசில் இணைய வேண்டும். வரும் தேர்தலில் இப்போது உள்ளஇந்தக் கூட்டணியே தொடரும் என்றார்.
Story first published: Wednesday, October 18, 2000, 5:30 [IST]