ஆந்திராவில் புயலுக்கு முந்தைய பலத்த மழைக்கு 2 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் புயலுக்கு முந்தைய பலத்த மழைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 4கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது ஆந்திர மாநிலம்மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது.
இந்த புயல் பெரும் புயலாக இருக்கும் என்றும், பலத்த மழை பெய்து பெருத்தசேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை மசூலிப்பட்டினத்துக்கும்நெல்லூருக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால்,அதற்கு முன்பே ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் வீடு இடிந்து விழுந்து 2 பேர்பலியாகியுள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 4 கடலோரமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் கடற்படைத் துருப்புக்கள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசி தேவைக்காக விமானப்படையின் இருஹெலிகாப்டர்கள் ஹகிம்பெட் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
5 மோட்டார் படகுகள் உள்பட 65 மீட்புப் படகுகளும், 60 நீச்சல் வீரர்களும் தயாராகவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications