For Daily Alerts
Just In
கோபால்-நெடுமாறன் பெங்களூர் பயணம் ரத்து
சென்னை:
வீரப்பனுடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் விளக்குவதற்காக புதன்கிழமை பெங்களூர் வருவதாக இருந்த தங்களது பயணத்தை நக்கீரன் கோபாலும், நெடுமாறனும் ரத்து செய்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன் கிழமை பெங்களூர் வருவதால் தூதர்களின் பயணம் ரத்துசெயய்பப்ட்டுள்ளதாக நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்துள்ளார். செவாய்க்கிழமை இரவு அவர்வெளியிட்ட அறிக்கையில் பெங்களூர் பயணம் குறித்த மறு தேதி கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்திய பின்முடிவு செய்யப்படும் என்றார் காமராஜ்.
கர்நாடக ஐ.ஜி. ஸ்ரீநிவாசனிடம் இது குறித்து கேட்டபோது, முதல்வர் கிருஷ்ணா புதன் கிழமை ரெய்ச்சூர் செல்கிறார்.வீரப்பனை சந்தித்த தூதர்களும் பெங்களூர் வரவில்லை என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, October 18, 2000, 5:30 [IST]