வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்றம் - ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ்
மும்பை:
கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலைவேகமாக முன்னேறி வருகிறது. நன்றாக நடப்பதற்கு 3 மாதம் ஆகும் என்றாலும், வரும்ஞாயிற்றுக்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
கடந்த மாதம் வாஜ்பாயிக்கு திடீரென்று மூட்டு வலி ஏற்பட்டது. அதனுடனேயே அவர்அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த வாரம்மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலேயே தங்கி அலுவல்களை அவர் பார்த்துவருகிறார். தினமும் அவருக்கு நடப்பதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல் நிலை வெகுவாக முன்னேறி உள்ளது. ஆகவே, அவர் நீண்டநாட்களுக்கு மும்பையில் இருக்கவேண்டிய அவசியம் இருக்காது. தீபாவளிக்கு முன் அவர்டெல்லி திரும்பிவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்என்று பிரீச் கேன்டி மருத்துவமனை பொது மேலாளர் சைரஸ் மெர்சன்ட் தெரிவித்தார்.
யு.என்.ஐ.