பினாமி சொத்து.. தி.மு.க. கவுன்சிலர் பதவி பறிப்பு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
பினாமி பெயர்களில் குத்தகைகள் எடுத்த தி.மு.க. நகரசபைகவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது.
சிதம்பரம் நகரசபை 4-வது வார்டு தி.மு.க. உறுப்பினர்பாலகிருஷ்ணன். இவர்1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டில்,வடக்குமச்ச சந்தையை தன் மகன் பெயரில் குத்தகைக்குஎடுத்துள்ளார்.
மேலரத வீதி நகராட்சி கட்டண கழிப்பிடத்தை தன் அங்கீகாரத்துடன்தன் சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்கி செல்வம் என்பவர்பெயரில் ஏலம் எடுத்திருக்கிறார்.
நகரசபை உறுப்பினர் ஒருவர் தன் பெயரிலோ அல்லது அவர்வாரிசோ ஏலம் எடுக்கக்கூடாது என சட்டம் உள்ளது. இந்த சட்டத்தைமீறி செயல்பட்ட பாலகிருஷ்ணன் மீது நகராட்சி சடடம் 1920-ம்பிரிவு 50 (1) பிரிவின் கீழ் அவரது பதவியை ரத்து செய்து நகராட்சிஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications