Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசடி நிறுவனங்களிடமிருந்து ரூ.136.83 கோடி அபராதம் வசூல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மோசடி நிறுவனங்களிடமிருந்து ரூ.136.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பதிவு பெற்ற மொத்தம்4,95,741 நிறுவனங்கள் உள்ளன.

இவற்றின் செயல்பாட்டையும், வரவு செலவுக் கணக்கையும் கண்காணித்தபோது2,54,553 நிறுவனங்களில் மோசடி நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அக் கம்பெனிகளை எச்சரிக்கும் பொருட்டு மோசடிகளை ஒப்புக்கொண்டால், கம்பெனிகளின் பதிவு ரத்து செய்யப்படாது. இல்லையென்றால்,கம்பெனியின் பதிவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் கம்பெனி சட்ட நடைமுறைச் சட்ட முகாம் 4 மாதங்கள் நடத்தப்படும்.அந்த முகாம்களில் கலந்து கொண்டு மோசடி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின்செயல்பாடுகளைப் பற்றி உண்மை நிலவரத்தைக் கூறி அபராதம் கட்டவேண்டும்என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்த முகாம்கள் மூலம் ரூ. 100 கோடி அபராதம் வசூலிக்கவும் மத்திய அரசு இலக்குநிர்ணயித்தது. ஆனால், 4 மாதம் நடந்த இந்த முகாம்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டஇலக்கை விடவும் அதிகமாக ரூ.136.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மோசடி நிறுவனங்களில் 1,27,083 நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்துஅபராதத்தைக் கட்டியுள்ளன. அவற்றுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடிசெய்யப்பட்டன.

அதே நேரத்தில் அபராதம் கட்டத் தவறிய 1,27,482 நிறுவனங்களுக்கு எதிரானநடவடிக்கையை மத்திய அரசு தீவிரபடுத்தியுள்ளது. அவற்றின் பதிவை ரத்து செய்யும்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+