நரிக்குறவர்கள் சண்டையில் பெண் சாவு
திருவண்ணாமலை:
சாவு வீட்டில் டான்ஸ் ஆடியதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்மாமனார், மருமகன் சண்டையை சமாதானம் செய்ய வந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு அருகே உள்ள களம்பூர் முனியன் தாங்கல் கிராமத்தைச்சார்ந்தவர் பாபு(50). இவர் தனது மகளை போளூர் அல்லி நகரைச் சேர்ந்த சேட் (33)என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் நரிக்குறவர்கள்.
இவர்கள் குடுமபத்தைச் சேர்ந்த ஒருவர் புதன்கிழமையன்று இறந்துவிட்டார். சேட்டும்அவர் மனைவியும் அங்கு சென்றனர். அங்கு அடிக்கபட்ட சாவு மேளத்தைக் கேட்டுதன்னை மறந்து ஆடத் துவங்கிவிட்டார் சேட்டின் மனைவி.
சாவு வீட்டில் எப்படி ஆடலாம் என மனைவியிடம் சண்டை போட்ட சேட்டிடம்ஆடினால் என்ன தவறு என கேட்டார் பாபு. இதனால் இவர்கள் இருவருக்கும்இடையே சண்டை மூண்டது. கோபமுற்ற சேட் வீட்டிற்குச் சென்று துப்பாக்கியோடுவந்தார். மாமனாரை சுட முயன்ற சேட்டை மனோகரி என்ற பெண் சமாதானம்செய்தார்.
ஆனால் சேட் சமாதானமடையாமல் மாமனாரை சுட்டார். ஆனால் குறிதவறி மனோகரிமீது குண்டு பாய்ந்து அவர் இறந்தார்.
முன்பே, பலமுறை துப்பாக்கியால் சுட்டு பலரை காயப்படுத்தியதற்காக சேட்டின்துப்பாக்கி லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இப்போது, லைசென்ஸ்இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், கொலை செய்த குற்றத்திற்காகவும்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications