மதிமுக கோஷ்டி மோதல் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டை என்ற இடத்தில் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தடுக்க போலீஸார்துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் மதிமுக தேர்தல் நடந்து வருகிறது. நாமக்கலில் நடந்ததேர்தலின்போது கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச்சூழ்நிலையில், கடலூரில் நடந்த தேர்தலிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
மதிமுகவைச் சேர்ந்த இரண்டு பிரிவினர் மோதிக் கொண்டனர். இவர்களைக் கலைக்கபோலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டனர். இதில்தேர்தல் அதிகாரி எல்.கணேசன் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications