For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுமாறன் குறித்து சர்ச்சை வேண்டாம் என்கிறார் கிருஷ்ணா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பிரச்னையில், தமிழக அரசுடன் எந்த விதமான மோதலும்இல்லை என கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் உள்ளிட்ட நான்கு பேர்ஜூலைமாதம் 30-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க அரசு தூதராக நக்கீரன்கோபால் நான்கு முறை காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தைநடத்தினார்.

ஐந்தாவது முறையாக சென்ற தூதுக் குழுவில் பழ. நெடுமாறன், பேராசியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோரும் சென்றனர். ராஜ்குமாரை மீட்க விடுதலைப்புலிகளுடன்தொடர்பு உள்ள நெடுமாறனை அனுப்பியது தவறு என சோனியா காந்தி விமர்சனம்செய்திருந்தார்.

இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்து, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின்ஒப்புதலுடன் தான் நெடுமாறன் காட்டுக்கு அனுப்பப்பட்டார் என கூறியிருந்தார்.

கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பெங்களூரில் வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்திருப்பதாதவது:

ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் கர்நாடக அரசு தமிழக அரசையே முற்றிலுமாகசார்ந்திருக்கிறது. ராஜ்குமாரை மீட்க தமிழக அரசு எடுக்கும் அனைத்துமுயற்சிகளுக்கும் கர்நாடக அரசின் முழு சம்மதம் இருக்கிறது. கருணாநிதியின்நடவடிக்கைகளில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக என்னை பலர் அணுகினார்கள். ஆனால் கர்நாடகஅரசு தானாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

இனியும் தமிழக அரசு எடுக்கும் நடவடிகைகளுக்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பும்ஆதரவும் கொடுக்கும். கருணாநிதி தெரிவித்துள்ள தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவிரும்பவில்லை.

இதன் மூலம் ராஜ்குமாரை விடுவிக்கும் முயற்சியில் எந்த பிரச்னையும் வருவதைவிரும்பவில்லை. ராஜ்குமார் விரைவில் நலமுடன் திரும்பி வருவதே முக்கியகுறிக்கோள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X