காங். கோஷ்டிப் பூசல் .. மயங்கி விழுந்தார் பார்வையாளர்
சென்னை:
தமிழக காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசிக்க சென்னை வந்த மேலிடபார்வையாளர் சங்கரநாராயணன் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தார்.
சிகிக்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் ஆலோசனைக் கூட்டம்பாதியிலேயே முடிந்தது.
தமிழக காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ம்தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். தலைவர் பதவியை பிடிக்கஇளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதிலும் இந்த இரு தலைவர்களின் கோஷ்டிகள்மோதத் துவங்கியுள்ளன. இதனால் சுமூகமாக தேர்தலை நடத்துவது குறித்துஆலோசிப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர் சங்கர நாராயணன் அவசரஅவசரமாக சென்னை வந்தார்.
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்துஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்துகூட்டத்தை மாலை வேறு இடத்திற்கு மாற்றினர். அதன்படி மாலையில் நடந்தகூட்டத்தில் இளங்கோவன், தங்கபாலு, பிரபு, தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இளங்கோவன், தங்கபாலு, பிரபு ஆதரவாளர்கள் பிரச்னையை கிளப்பினர்.கோஷ்டிகள் ஆளாளுக்கு பேச கூட்டம் காரசாரமாக மாறியது. அமைதிப்படுத்தமுடியாமல் திணறிய சங்கரநாராயணனுக்கு கடைசியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுமயங்கி விழுந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.
உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications