"ராஜ்குமாருக்கு
டெல்லி:
நடிகர் ராஜ்குமார் நீண்ட நாட்கள் பணயக் கைதியாக இருந்தால் அவருக்கு"ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்கீல் தெரிவித்தார்.
ராஜ்குமாரை கடத்திச் சென்றுள்ள வீரப்பன் விதித்துள்ள நிபந்தனைப்படி 5 தமிழ்த்தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச்சில்விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல் வி.ஆர்.ரெட்டி, 80 நாட்களாகராஜ்குமார் காட்டில் இருந்து வருகிறார். இந்த நிலை நீடிக்குமானால், பணயக் கைதியாகஇருக்கும் ஒருவர் நாட்கள் செல்லச் செல்ல அந்த இடத்தையே விரும்பி, அங்கிருந்துதிரும்பி வரத் தயக்கம் காட்டக் கூடிய ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்படும்அபாயம் உள்ளது என்றார்.
1973-ம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், சில கொள்ளைக்காரர்கள்,வங்கி ஊழியர்கள் சிலரைக் கடத்திச் சென்றனர். நீண்ட நாட்கள் அவர்கள் பிடியில்இருந்த பிணைக் கைதிகள் பிறகு கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக மாறி விட்டனர்.அதிலிருந்து இதுபோன்று நிகழ்வதை ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என அழைக்கத்துவங்கினர்.












Click it and Unblock the Notifications