வாழப்பாடி புகார்: சி.பி.ஐ. விசாரணை கோருகிறது த.மா.கா.
சென்னை:
எம்.பி. சீட்டுக்கள் பெற ராமதாசுக்கு வாழப்பாடி ராமமூர்த்தி லஞ்சம் கொடுத்ததுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக த.ம.ா.கா. மாநில நிர்வாகிகள் கூட்டாக வெளியிடுள்ளஅறிக்கையின் விவரம் வருமாறு:
சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாழப்பாடி ராமமூர்த்தி,பாரதிய ஜனதா கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்குமூன்று இடங்கள் பெற்றுத்தர டாக்டர் ராமதாசுக்கு 2.5 கோடி லஞ்சம் தந்ததாககூறியிருந்தார். அதை திரும்பப் பெற அவரோடு சமாதானமாக போகமுடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு சரியான பதிலேதும் தராமல் மழுப்பி வருகிறார். சாதாரணகுடும்பத்தில் பிறந்து அரசியல் வாழ்வில் முன்னேறியவன் என கூறி வரும் வாழப்பாடிராமமூர்த்தியிடம் எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தவிசாரணைக்கு பா.ஜ.க. தலைமையும், முதல்வர் கருணாநிதியும் ஏற்பாடு செய்யவேண்டும்.. ராமதாசிடம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து சமீபகாலத்தில் ஏற்பட்டகலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில்கேட்டுக் கொண்டுள்ளனர்.