ஹைதராபாத்தில் விஷ வாயுக் கசிவு: உயிருக்கு பயந்து மக்கள் தப்பி ஓட்டம்
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை விஷ வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து அங்குபெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
பாலாநகர் - ஜேடிமெல்டா பகுதியிலுள்ள ஆலைகளில் இருந்து இந்த விஷ வாயுகசிந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வாயுவை சுவாசித்தவர்களுக்கு வாந்தியும், கண் எரிச்சலும், மூச்சடைப்பும்,தலைவலியும் ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு அஞ்சி மக்கள் அருகில் உள்ளபேகம்பேட், கிரீன்லேண்ட்ஸ், அமீர்பேட், சஞ்சீவரெட்டி நகர் மற்றும் பல ஊர்களில்தஞ்சம் புகுந்துள்ளனர்.
போலீசாரும், ஆந்திர சுற்றுப்புறச்சூழல் கட்டுப்பாடு அதிகாரிகளும் எந்தஇடத்திலிருந்தி வாயு லீக் ஆகியிருக்கக்கூடும் என்பது குறித்து தீவிரமாக சோதனைநடத்தி வருகின்றனர்.
அவர்கள் வாயுவை திரவ நிலையில் எடுத்துச் சென்ற லாரி கிரீன்லாண்ட்ஸ் பகுதியைக்கடந்து செல்லும் போது அதிலிருந்து வாயுவே அல்லது திரவமோசிந்தியிருக்கக்கூடும்என சந்தேகிக்கின்றனர். சிந்திய திரவத்தின் தடத்தைப் பின்பற்றிஅந்த வாகனம் சென்ற இடத்தை கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள்.
இந்த வாயு வெளிப்பாடு எந்த ஆலையிலிருந்தும் வரவில்லை என சுற்றுப்புறச் சூழல்கட்டுப்பாடுத் துறையின் செயலாளர் திஷியா சேட்டர்ஜி தெரிவித்தார். ஏனென்றால்பாலாநகர்-ஜேடிமெல்டா மற்றும் சனாத்நகரில் வாழும் மக்கள் எந்த விதமானபாதிப்பும் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை.
மருத்துவர்கள் அந்த வாயுவின் பாதிப்பு காற்றில் கலந்திருக்கும் வரைதான்பிரிச்னைகள் இருக்கும். அது கலைந்து விட்டால் எந்த விதமான பாதிப்பும் இருக்காதுஎன சொன்னதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
சுற்றுப்புறச் சூழல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளிப்பட்ட வாயு ஃபார்மாடிஹைடாகஇருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கிடைத்த திரவ தடத்தை வைத்து வாயு என்னவகையைச் சேர்ந்தது என்பதை கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications