மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டை அருகே அரசு மருத்துவ பரிசோதனை முகாமில் கொடக்கப்பட்டமாத்திரைகளை சாப்பிட்ட 24 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
உடுமலைப் பேட்டையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவபரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் 6ம் வகுப்பைச் சேர்ந்த 180 மாணவிகளுக்கு மருத்துவபரிசோதனை நடந்தது.
பரிசோதனை முடிவில் 24 மாணவ மாணவிகளுக்கு சில மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட மாணவிகள் சில மணி நேரத்தில் மயக்கமடைந்தனர். இன்னும் சிலமாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பின்னர், இவர்கள் அனைவரும் உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்றனர். மாணவிகள் மயக்கமடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications