For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டுக்குச் செல்லுங்கள்!: தூதர்களுக்கு கர்நாடக திரையுலகம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் 4 தூதர்களும் மீண்டுக்குள் காட்டுக்குள் சென்றுவீரப்பனிடம் பேசவேண்டும் என்று கர்நாடக திரைப்படத் துறையின் நடவடிக்கைகமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார், ஜூலை 30-ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பனால்கடத்தப்பட்டார். 83 நாட்கள் ஆன பிறகும் இன்னும் ராஜ்குமார் மீட்கப்படவில்லை.

இந் நிலையில், ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் அரசுத் தூதராக நக்கீரன் கோபால்செயல்பட்டார். அவரைத் தொடர்ந்து பழ. நெடுமாறன், சுகுமாறன், கல்யாணிஆகியோரும் ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால், இன்னும் ராஜ்குமார் மீட்கப்படவில்லை. வீரப்பன் பிடியிலிருந்து முதல்நபராக நாகராஜ் தப்பி வந்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்குமாரின் மருமகன்கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார். ஆனால், ராஜ்குமார் மட்டும்விடுவிக்கப்படவில்லை. அவருடன் நாகேஷ் என்பவரும் வீரப்பன் பிடியில் உள்ளார்.

இந் நிலையில், கர்நாடக திரைப்படத் துறையின் நடவடிக்கை கமிட்டியினர் 4தூதர்களையும் சந்தித்துப் பேசினர். ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் 4 பேரும்மீண்டும் காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேச்சு நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கமிட்டியின் தலைவர் கே.சி.என். சந்திரசேகர்,ஒருங்கிணைப்பாளர் சா.ரா. கோவிந்து இருவரும் வெளியிட்ட செய்திக் குறிப்பில்தெரிவித்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X