மும்பையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன், மருமகள், பேத்தி கொலை
மும்பை:
மும்பையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன், மருமகள், பேத்தி கொலைசெய்யப்பட்டனர்.
சனிக்கிழமை நடந்த ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்மும்பை நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி கூறப்படுவதாவது:
மும்பை காவல் துறையில் உதவி கமிஷனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜாராம்பராப். இவரது மகன் சுரேஷ் பராப் (54). அவருக்கு மனைவி ஆஷா (45), மகள்யோஜிதா (25) ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் மும்பையின் புறநகரான பாண்டுரங்காவாடியில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் சுரேஷின் தம்பி வினோத் (45), சுரேஷ் பராப் வீட்டுக்கு வந்து அவரையும்,அவரது மனைவி மற்றும் மகளையும் சுட்டுக் கொன்றார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இக் கொலைகளை வினோத் செய்ததாகப் போலீஸார்தெரிவித்தனர். சகோதர்கள் இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்ததாகக்கூறப்படுகிறது.
வினோத் தன்னிடமிருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தனது சகோதரரையும்அவரது மனைவி மற்றும் மகளையும் சுட்டுக்கொன்றார். சம்பவ இடத்திலேயே மூன்றுபேரும் இறந்தனர்.
இச் சம்பவத்தை அடுத்து வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிபறிமுதல் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சென்றுவிசாரணை நடத்தினர்.
யு.என்.ஐ.