சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெ.க்கு தோல்விதான்
சென்னை:
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும்ஜெயலலிதா தோல்வியை சந்திப்பார்என எம்,ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்.கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழாநடைபெற்றது. அந்த விழாவில் ஆர்.எம். வீரப்பன் பேசியதாவது:
எம்,ஜி.ஆர். கழகம் லட்சியத்துடன் தொடங்கப்பட்டது. புரட்சித் தலைவரின் பெயரைச்சொல்லி கொள்ளையடிப்பவர்களை அரசியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றகொள்கையுடன் தொடங்கப்பட்டது எம்.ஜி.ஆர். கழகம்.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி நாட்டின்சொத்துக்களை கொள்ளையடித்தாரே! இதுவா புரட்சித்தலைவர் காட்டிய வழி?
ஜெயலலிதாவுடன் இப்போது கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் முன்பு அவர் ஊழல்செய்கிறார் என அவர் மீது குற்றம் கூறிய கட்சிகள்தான். 1996-ம் ஆண்டு நடந்ததேர்தலில் தோற்றது போல் 2001-ல் நடக்கவிருக்கும் தேர்தலிலும் ஜெயலலிதாதோல்வியடைவார்.
நீதிமன்றத்தில் சில வழக்குகளில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலவழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அந்த வழக்குகளிலும் விரைவில் தீரப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டு அடுத்தமாதம் 3-வது வாரம் வருமான வரி அலுவலகங்கள் முன் போராட்டம்நடத்தவிருக்கிறோம் என்றார் ஆர்.எம். வீரப்பன்.












Click it and Unblock the Notifications