உ.பி.யில் கொடூரம்: தலித்கள் மீது ஆசிட் வீச்சு - 2 பேர் கண் பறிப்பு
லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் மீது உயர் சாதியினர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் 2 பேருக்கு கண் பார்வை போனது.
இது பற்றி கூறப்படுவதாவது:
உ.பி. பாராபாங்கி மாவட்டத்தில் உள்ளது மாதெய்லா கிராமம். இக் கிராமம் மாநிலத்தலைநகர் லக்னோவிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது.
மாதெய்லா கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக அக் கிராமத்தில்வசிக்கும் உயர் சாதியினருக்கும், தலித்துகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது 6 தலித்துகளை உயர்சாதியினர் கட்டிவைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் அவர்களது முகத்தில்ஆசிட்டை வீசி விட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த ஆசிட் வீச்சில் இரு தலித்துகளின் கண் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது.சிகிச்சைக்காக 6 தலித்துகளும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதுதான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாதெய்லா குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை 3 தலித்துக்களுக்கு வழங்கப்பட்டது.அவர்கள் கூலி ஆட்களை வைத்து குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த உயர் சாதியினர், மீன் பிடித்துக் கொண்டிருந்த தலித்துகளைகம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் முகத்தில் ஆசிட்டைஊற்றிச் சென்றுவிட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
எங்களை உயர் சாதியினர் தாக்கியது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் போலீஸார்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைசியாக எங்கள் முகத்தில் ஆசிட் வீசப்பட்டபிறகும் நாங்கள் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். ஆனால், அதைவாங்க போலீஸார் மறுத்துவிட்டனர் என்று பாதிக்கப்பட்ட ஒரு தலித் தெரிவித்தார்.
போலீஸாரும், தலித்துகள் முகத்தில் ஆசிட் வீசிய உயர் சாதியினர் மீது இன்னும்வழக்கோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படிபாராபாங்கி மாவட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர்எம்.சி. திவேதி தெரிவித்தார்.
இச் சம்பவம் ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம்தான். பாராபாங்கி மாவட்டநிர்வாகத்திடமிருந்து இச் சம்பவம் குறித்து எந்த தகவலும் வராத பட்சத்தில் வேறுஎதுவும் கூற முடியாது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications